வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் கிளாந்தான் மாநிலத் தேர்தலில், ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நம்பிக்கைக் கூட்டணி (PKR) போட்டியிடுகிறது.
கிளாந்தானிலுள்ள பஞ்சோர், சேட்டோக், மெங்கெபாங், பாசீர் பெகான், கோத்தா லாமா, பாசீர் தும்போ மற்றும் லிம்பொங்கான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலேயே நம்பிக்கை கூட்டணி போட்டியிடுகிறது என்று, கிளாந்தான் மாநிலத் தலைமைக் குழுவின் (MPN) துணைத் தலைவர் சையத் முகமட் அலிடுஸ்டுர் சையத் முகமட் ஜெய்ன் கூறினார்.