தொங்கு பாலத்தில் இருந்து தவறி, ஆற்றில் விழுந்த சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

தொங்கு பாலத்தில் இருந்து தவறி, ஆற்றில் விழுந்த 13 வயது சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இன்று சனிக்கிழமை (ஜூலை 8) கம்போங் தெலிபோங்கில் பிற்பகல் நடந்த சம்பவத்தில், முகமட் ஹிஷாம் இஸ்கந்தர் அஸ்லி என்ற சிறுவன் தொங்கு பாலத்தில் ஐந்து நண்பர்களுடன் இருந்தான் என்று, துவாரான் தீயணைப்பு நிலையத் தலைவர் முகமட் அப்துல் காவி கூறினார்.

பிற்பகல் 2.38 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், உடனே சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் “இதுவரை சிறுவன் கண்டுபிடிக்கவில்லை,என்றும், ஆற்றங்கரைப் பகுதியில் தொடங்கி தேடுதல் நடத்தப்படுகிறது,” என்றும், அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மோப்ப நாய் ( K9) பிரிவின் உதவியை அவர்கள் கோருவார்கள் என்றும் அவர் கூறினார்.

சிறுவன் எப்படி ஆற்றில் தவறி விழுந்தான் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், மேலும் தொடர்பில் இது விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here