முகநூல் முதலீட்டு திட்டத்தின் வழி அரை மில்லியன் ரிங்கிட்டை இழந்த மாது

ஜோகூர் பாரு: கடந்த மே மாதம் முகநூலில் நடந்த முதலீட்டு மோசடியில் சிக்கிய உள்ளூர் பெண் 42, அரை மில்லியன் ரிங்கிட்டை இழந்தார். ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத்  கூறுகையில், அந்த பெண் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கெம்பாஸ் காவல்நிலையத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் உள்ளூர் பெண் ஒருவர் தனக்கு மாதம் 28,000 ரிங்கிட் தொகையுடன் முதலீட்டு வாய்ப்பை வழங்கியதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் மே 30 முதல் ஜூலை 11 வரை மொத்தம் RM672,491 நான்கு வெவ்வேறு கணக்குகளில் 14 பரிவர்த்தனைகளை செய்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here