ஜன விபாவா திட்டத்துடன் தொடர்புடைய RM6.9 மில்லியன் ரிங்கிட் தொகையை அவர் செலுத்தத் தவறியதால், முன்னாள் பெர்சாத்து தகவல் தலைவர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் மீதான ஊழல் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும்.
இன்று (ஜூலை 21) கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்த, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோசினா அயோப், குறித்த வழக்கு விசாரணையை தொடர உத்தரவிட்டார்.
அடுத்த ஆண்டில் 8 நாட்களை குறித்த விசாரணைக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது. அதாவது மார்ச் 25-27, ஏப்ரல் 29-30 மற்றும் மே 20-22, 2024 என்பனவாகும்.