கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

டுங்கூன் –

புக்கிட் பேசிக்கு அருகிலுள்ள கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை (LPT2) வின் 375.8-வது கிலோமீட்டரில் நேற்று மாலை கார் கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் இரண்டு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.

மாலை 6.25 மணியளவில் நடந்த இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நிக் முஹமட் ஜயான் இர்பான் சுல்ஹில்மி இஸ்மாயில், 2 மற்றும் அவரது தாயார் ராஜா நூர்ஹானானி நபிலா ராஜா ஹுசின், 23 மற்றும் அவரது பாட்டி நோரேஹா முஹமட், 53 ஆகியோர் உயிரிழந்தனர் என்று, டுங்கூன் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் பஹாருதீன் அப்துல்லா தெரிவித்தார்.

இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும், சம்பவத்திற்கு முன், ஐந்து பேர் கொண்ட குடும்பம், ராஜா நூர்ஹானானியையும் அவரது குழந்தையையும், குவாந்தானுக்கு அனுப்புவதற்காக, கிளாந்தான், வகாஃப் பாரு, கம்போங் செமாட் ஜலில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து சென்று கொண்டிருந்ததாக அவர் கூறினார்.

“சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ​​​​பாதிக்கப்பட்டவரின் இளைய சகோதரர் ராஜா ஹைகல் நஜ்மி ஓட்டிச் சென்ற புரோத்தோன் வீரா கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் மோதி கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் “ராஜா நூர்ஹனானியின் இளைய சகோதரர், ராஜா ஹைகல் நஜ்மி, 20, அவரது வலது கால் மற்றும் ராஜா நூர்ஹுமைரா நட்ஸிரா, 17, அவரது இடது தோள்பட்டை உடைந்தது. காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக டுங்கூன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here