நடன நிகழ்ச்சியில் குழந்தையிடம் ஆபாச மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகள்..!

மும்பை சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

நிகழ்ச்சியில் நடுவர்கள் மேடையில் சிறிய குழந்தையிடம் அவரது பெற்றோர்கள் குறித்து ஆபாசமான மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள ஒரு வீடியோவில், சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 மேடையில் இருக்கும்போது ஒரு குழந்தையிடம் அவரது பெற்றோரைப் பற்றி தகாத மற்றும் பாலியல் குறித்த வெளிப்படையான கேள்விகளை நடுவர்கள் கேட்பதைக் காட்டுகிறது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here