ராமேஸ்வரி ராஜா
பாகான் செராய், பேராக்
பாம்பின் மீது எந்த ஒரு சலனமுமின்றி படுத்திருந்த சிறுவன் தொடர்பான காணொளி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளி காட்சி நேற்று வலைத்தளங்களில் பகிரப்பட்டதையடுத்து தீயணைப்பு மீட்ப்புப்படையினர் சம்பவம் தொடர்பான விளக்கத்தை வழங்கியுள்ளனர்.
தாமான் செராய் பெர்டானா, பாகான் செராய் பேராக்கில் நேற்று இச்சம்பவம் நிகழ்ந்தது. காலை 11.28 மணியளவில் தகவல் பெற்றதையடுத்து பாகான் செராய் தீயணைப்பு மற்றும் மீட்ப்புப்படையினர் அங்கு விரைந்தனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தை அடைந்தபோது ஒரு குட்டிப் பாம்பு சிறுவன் ஒருவனின் கீழ் படுத்து அசைந்துகொண்டிருந்தது. காலை 11.47 மணியளவில் அதனை மீட்ப்புப்படையினர் லாவகமாகவும் வெற்றிகரமாகவும் பிடித்தனர் என தீயணைப்பு மீட்ப்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.
பிடிக்கப்பட்ட பாம்பு பின்னர் ஏதுவான இடத்தில் விடப்பட்டது. இச்சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில் சிறுவன் பாம்பிடமிருந்து எந்த ஒரு சீண்டலுமின்றி தப்பித்தான்.