பிலிப்பைன்ஸ் அதிபர் முதன்முறையாக மலேசியா வருகை

பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் Jr அரசுமுறைப் பயணமாக மலேசியாவிற்கு வந்துள்ளார், இது மலேசியாவிற்கான அவரது முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.

இஸ்தானா நெகாராவில் நடைபெறும் அரசு வரவேற்பு விழாவில், மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தாபா பில்லாஹ் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவரை வரவேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “

மாட்சிமை தங்கிய பேரரசருடன் சந்திப்பை மேற்கொண்ட பின்னர், பிலிப்பைன்ஸ் அதிபர் மற்றும் அவரது தூதுக்குழுவைக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் அவர்கள் கலந்துகொள்வார்கள் , ”என்று விஸ்மா புத்ரா இன்று வேளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் மார்கோஸ் சந்திக்க உள்ளார் என்றும், அச்சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள், பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்த கருத்துகளையும் பரிமாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here