மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இருவர் மரணம்

கூச்சிங்:

ஜாலான் சுல்தான் தெங்கா பகுதியில், மோட்டார் சைக்கிள் சறுக்கி, மரத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், பின்னிருக்கை பயணியும் உயிரிழந்தனர்.

39 மற்றும் 48 வயதுடைய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூச்சிங் மாவட்ட போலீஸ் தலைவர், கண்காணிப்பாளர் மெர்பின் லிசா தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் கம்போங் பாசீர் பாண்டக்கிலிருந்து சந்துபோங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது என்றார்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஓட்டிச் சென்ற ஹோண்டா இஎக்ஸ்-5 மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

“பாதிக்கப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்ததை சரவாக் பொது மருத்துவமனை (HUS) துணை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இறந்த இருவரின் உடல்களும் மரணத்திற்கான காரணத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனைக்காக HUS இன் தடயவியல் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here