மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் குறைந்த விலையில் இணையசேவை

கோலாலம்பூர், ஆகஸ்ட்டு 3:

நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் இணையசேவையை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, தற்போது குறிப்பாக மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு, இணைய அணுகல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதற்கும், ஆராய்ச்சி நடத்துவதற்கும், கவலையின்றி பணிகளைச் சமர்ப்பிப்பதற்கும் இந்த இணைய முயற்சியை பயன்படுத்த முடியும் என்று, Universiti Utara Malaysia (UUM) துணைவேந்தர் (மாணவர் மற்றும் முன்னாள் மாணவர் விவகாரம்) பேராசிரியர் டாக்டர் அஹ்மத் மர்தாதா முகமட் கூறினார்.

“நாங்கள் மாணவர்களுக்கு விரிவான இணைய அணுகலை வழங்க முயற்சிக்கிறோம், ஆனால் பல அணுகல் கோபுரங்கள் தேவைப்படும் சூழ்நிலையில், இது அதிக செலவுகளை உள்ளடக்கியது.

உதாரணமாக் “UUM இன் சூழலில், எங்களிடம் கிட்டத்தட்ட 20,000 மாணவர்கள் வளாகத்தில் உள்ளனர், எந்த நேரத்திலும், உதாரணமாக இரவில் அனைத்து மாணவர்களும் தங்கும் விடுதியில் இருக்கும்போது, இணையத்தில் இடையூறு ஏற்படும்” என்றும், அதே நேரத்தில் மலிவான இணைய சேவையைப் பயன்படுத்தும்போது அனைத்து மாணவர்களுக்கும் அணுக்கள் கிடைக்கும், அதே நேரத்தில் பல்கலைக்கழகம் மேலும் விரிவான அணுகலை வழங்க முடியும் என்றார்.

அதே நேரத்தில், மலிவான விலைகள் மாணவர்களின் சுமையை குறைக்க உதவியது, குறிப்பாக B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.

இந்நிலையில்,புதிய MSAP பயன்படுத்தப்படும் என்றும், வரும் செப்டம்பரில் இணைய விலைகள் மலிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், கடந்த திங்களன்று, தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாஷில் தெரிவித்திருந்தார்.

மேலும் MSAP இணைய அணுகலின் மொத்த விலைகளைக் குறைக்கும், அதே நேரத்தில் மக்களுக்கு பரந்த கவரேஜை உறுதி செய்வதற்காக ‘சாலை இருக்கும் இடத்தில், எல்லாம் இணையம் இருக்கிறது’ என்ற புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here