இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இலங்கையில் இந்திய ரூபாயை பொது பணமாக பயன்படுத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார். அதன்பிறகு அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்த பயணத்தின்போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனிடையே ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணத்துக்கு பிறகு, இலங்கையில் அமெரிக்க டாலர், சீனாவின் யென் ஆகியவற்றை போல இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்துக்கு அனுமதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. எனினும் அது குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த சூழலில் இலங்கையில் இந்திய ரூபாயின் பயன்பாடு குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இலங்கையின் மத்திய வங்கி நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளிட்டது. அதில் “இலங்கையில் இந்திய ரூபாய் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பணமாக இருந்தாலும் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு அது செல்லுபடியாகாது. இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்” கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here