உக்ரேனிய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியைப் (Volodymyr Zelenskyy) படுகொலை செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி தொடர்பில், ரஷ்யாவுக்கு வேவுபார்த்த சந்தேகத்தின் பேரில் உக்ரேனியப் பெண் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டிருப்பதாக உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக்கோலைவ் (Mykolaiv) வட்டாரத்துக்குச் சென்ற வாரம் ஜெலென்ஸ்கி சென்றபோது, அவர் மீது ஆகாயம்வழி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதில் அந்தப் பெண்ணும் ஈடுபட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சதித்திட்டத்தை முறியடித்துக் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here