7 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த தாய் மற்றும் அவரது தோழி கைது

 

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்டு 12:

தாய் உட்பட இரண்டு பெண்களால் 7 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது,.

பாசீர் கூடாங்கிற்கு அருகிலுள்ள பண்டார் லயங்காசா குடியிருப்புப் பகுதியில், பாதிக்கப்பட்டவரது பக்கத்து வீட்டுக்காரரின் புகாரைத் தொடர்ந்து, இரண்டு குழந்தைகள் தங்கியிருந்த வீட்டைச் சோதனை செய்தபோது, இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

குழந்தையின் தாய் 27 வயதான தனித்து வாழும் தாய் என்பதும், மற்றொரு பெண் அவரது தோழியான 30 வயது ‘tomboy’  என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பொதுமக்கள் வீட்டை முற்றுகையிட்ட சம்பவத்தைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

வீடியோவில், குழந்தையின் உடலின் பின்புறத்தில் பலத்த காயங்கள் இருப்பதையும் காட்டுகிறது.

இதற்கிடையில், ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் சொஹைமி இஷாக்கை தொடர்பு கொண்டபோது, ​​குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு பொதுமக்கள் அளித்த புகாரை அவர் உறுதிப்படுத்தினார்.

“பாதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக HSI (மருத்துவமனை சுல்தான் இஸ்மாயில்) க்கு அனுப்பப்பட்ட நிலையில், சிறுவனின் உயிரியல் தாய் மற்றும் பெண் நண்பர் (‘tomboy’ ) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,” என்று அவர் கூறினார்.

குழந்தைகள் சட்டம் 2001ன் பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here