பிரபல நடிகரின் மகளை திருமணம் முடிக்கும் அசோக் செல்வன்

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வளர்ந்து வருபவர் அஷோக் செல்வன்.

தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி தெகிடி, கூட்டத்தில் ஒருவன், 144, ஓ மை கடவுளே என பல்வேறு கதைகளில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்  அசோக் செல்வன். சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனையடுத்து, நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு சரிவராது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here