கோலாலம்பூர்: சிட்னியில் இருந்து கோலாலம்பூர் நோக்கி வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட ‘அவசர நிலை’ காரணமாக திருப்பி அனுப்பப்பட்டது. சிட்னியை தளமாகக் கொண்ட 9நியூஸ் படி, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH122 சிட்னியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு மீண்டும் 3.47 மணிக்கு ஓடுபாதையில் தரையிறங்கியது.
விமானம் அவசரகால வாகனங்களால் சூழப்பட்ட நிலையில் ஓடுபாதைக்கு வந்தது. ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸ் (AFP) சிட்னி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஒரு அவசர தகவல் வந்ததாகவும் ஒரு நபர் விமானத்தில் “ஊழியர்கள் மற்றும் பயணிகளை அச்சுறுத்துவதாக” ஒரு டுவிட் வழி அறியப்பட்டதாகவும் 9நியூஸ் கூறியது.