25 வயதில் உயிரிழந்த நடிகர்..

தமிழ், இந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பவன். கார்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பவனின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் என கூறப்படுகிறது. 25 வயதான நடிகர் பவனின் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், சின்னத்திரை நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர்(30) மாரடைப்பால் மரணமடைந்தார். தொடர்து கன்னட நடிகர் விஜய் ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா தாய்லாந்தில் விடுமுறைக்கு சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here