கோத்தா திங்கி:
கம்போங் மாவாய், ஜாலான் உத்தாமா என்ற இடத்தில் வாகனம் சறுக்கி விபத்துக்குள்ளானதில் லோரி ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது உதவியாளர் லேசான காயம் அடைந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) மதியம் 12.33 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வாகனம் (FRT) மற்றும் அவசர மருத்துவ மறுமொழி சேவைகள் (EMRS) வாகனம் ஆகியவற்றுடன் நிலையத்தில் இருந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
லோரி ஓட்டுநர் அவரது இருக்கையில் சிக்கிக்கொண்டிருக்க காணப்பட்டார் ” என்று கோத்தா
திங்கி தீயணைப்பு நிலையத்தின் தலைவர், ஷவாலுதீன் அமி நோர்டின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்த சுகாதார அமைச்சின் மருத்துவ அதிகாரியால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது என்று ஷவாலுதீன் கூறினார்.