கோலாலம்பூர் –
சமீபத்தில் ஜோகூரில் உள்ள பக்ரியில் பெரிக்காத்தான் நேஷனல் கட்சியின் ஏற்பாட்டில் நடந்த ஒரு நிகழ்சசியில் கலந்து கொண்டதாக கூறப்படும் மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர் மீது அம்னோ நடவடிக்கை எடுக்கும் என்று டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ரெம்பியா மாநில சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் ஜெய்லானி காமிஸின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கைக்காக காத்திருப்பதாக அம்னோ தலைவர் கூறினார்.