ரொம்பின்:
நேற்று ரொம்பினில் உள்ள சுங்கை லுபுக் பத்து, கோத்தா பஹாகியாவில் மட்டிகளைத் (mussels) தேடும் போது 14 வயது பையன் காணாமல் போனதாகவும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாலை 5.30 மணியளவில், தகவல் கிடைத்தது என்று, ரொம்பின் மாவட்ட காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அஸாஹரி முக்தார் கூறினார்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர் ஃபெல்டா கெராடோங் 4, ரோம்பினைச் சேர்ந்த முகமட் இமான் டேனியல் அஸ்ரி, 14, என இனங்காணப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பரின் தகவலின்படி, ஆற்றில் மட்டிகளைத் (mussels) தேடும் போது, வலுவான நீரோட்டத்தில் குறித்த சிறுவன் அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை , குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கிராம மக்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.
“இருப்பினும், தேடல் நடவடிக்கை இரவு 8.30 மணிக்கு நிறுத்தப்பட்டது, ஆனால் இன்று தொடரும்” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.