ஈப்போ-
கடந்த வியாழன் அன்று சுங்காய், தாப்பாவில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்து கொண்டிருந்த ஆடவரை மானபங்கம் செய்த குற்றச்சாட்டில் 57 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இரவு 9.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், சந்தேக நபர் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக 34 வயதான பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததாக தாப்பா மாவட்ட காவல்துறை தலைவர், முகமட் நைம் அஸ்னாவி தெரிவித்தார்.
புகாரைத் தொடர்ந்து “சந்தேக நபர் அன்றைய தினம் இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சந்தேகநபர் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் அவர் போலீஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்t.
குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டு தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் முகமட் நைம் கூறினார்.