ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 3 பேர் பலியாகினர். 20 பேர் காயமடைந்தனர். இன்று காலை 9.30 மணியளவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களின் விமானம் ஒன்று விபத்திற்குள்ளானது.
எம்.வி.-22பி ஆஸ்பிரே ரக விமானத்தில் பயணம் செய்த வீரர்கள் இந்த விபத்தில் சிக்கினர். அவர்கள் அனைவரும் ராயல் டார்வின் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றன.
விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை தொடங்கியுள்ளது. இதனை ஒரு வருந்தத்தக்க சம்பவம் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறியுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் கலிபோர்னியாவில் பயிற்சியில் விமானம் விபத்தில் சிக்கியதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்தனர்.
அதே ஆண்டில் நார்வே நாட்டில் நடந்த நேட்டோ பயிற்சியில் ஏற்பட்ட விபத்தில் அமெரிக்காவின் 4 சேவை பணியாளர்கள் உயிரிழந்தனர். இதே போல் 2017-ஆ ஆண்டில் 2 ஆஸ்பிரே ராணுவ விமானங்கள் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.