நெடுஞ்சாலையை கடந்த புலி; மரண பயத்தை எதிர்கொண்ட வாகனமோட்டி

கோலாலம்பூர்: பகாங்கில் உள்ள புக்கிட் பிரேசரில் இருந்து நேற்றிரவு காரை ஓட்டிச் சென்ற ஒருவர், நெடுஞ்சாலையைக் கடக்கும் புலியை திடீரெனப் பார்த்தபோது அவருக்கு மரண பயம் ஏற்பட்டதாக கூறியிருக்கிறார்.

வாட்ஸ்அப் குழுக்களில் பரவலாகப் பரப்பப்பட்ட ஒரு குரல் பதிவின் அடிப்படையில், ஒரு நபர் புலியை பார்த்த பின்  தன்னை காப்பாற்றும்படி ‘கடவுளிடம்’ கேட்பதை அந்த குரல் பதிவில் கேட்கிறது. இரவில் மறைவதற்குள், புலி சாலையின் மறுபுறம் செல்வதற்காக டிவைடரைத் தாண்டி குதித்ததாக அவர் பதிவில் விவரித்தார்.  இரண்டு வினாடி டேஷ்கேம் பதிவும் அந்த மனிதனின் வைரல் குரல் குறிப்புடன் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here