கோத்தா கினாபாலு:
இன்று காலை 7.13 மணியளவில் ரானாவ் பகுதியில் பலவீனமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் பதிவுசெய்தது.
நிலநடுக்கத்தின் மையம், 5 கிமீ ஆழத்தில், ரானாவ்வுக்கு வடமேற்கே 13 கிமீ தொலைவில் இருந்ததாகவும், ரானாவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கலாம் என்று, மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நிலைமையை மலேசிய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அது தெரிவித்தது.