NSEஇல் ஆறு வாகனங்கள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி; 6 பேர் காயம்

நிபோங் தெபால்:

புக்கிட் மின்யாக் மற்றும் சுங்கை பகாப் இடையிலான வடக்கு-தெற்கு எக்ஸ்பிரஸ்வேயில் (NSE) வடக்கு நோக்கி KM164.8இல் இரண்டு டிரெய்லர்கள் மற்றும் நான்கு கார்கள் மோதிய விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்தார், ஐந்து பேர் சிறு காயங்களுக்கு ஆளாகினர், டிரெய்லர்களின் இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 14 பேர் காயமின்றி தப்பினர் என்று மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“அதிகாலை 4 மணியளவில் நடந்த விபத்தில், மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட டிரெய்லர்களில் ஒன்று நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதனால் விபத்தின் போது மரக்கட்டைகள் பல பாதிக்கப்பட்டவர்கள் கார்களில் சிக்கிக் கொண்டது” என்று அவர் மேலும் கூறினார்.

இதன்காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் , விபத்தில் சிக்கியவர்கள் தீயணைப்புத்துறையின் உறுப்பினர்களால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here