ஜோகூர்:
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் அதிகாரப்பூர்வ பயணமாக புருனே பயணமானார்.
இந்த பயணத்தின் போது புருனே சுல்தான் சுல்தான் ஹசனல் போல்கியாவை ஜோகூர் சுல்தான் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுல்தான் இப்ராஹிமின் தந்து அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்தார்.
சுல்தான் இப்ராஹிமுடன் அவரது துணைவியார், ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி மற்றும் ஜோகூர் மாநிலச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரோஹானி ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.