சிறையில் தண்டனை அனுபவித்து வரும் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என டத்தோஸ்ரீ நஜிப்பிற்கான நீதி இயக்கக் கூட்டணியின் பிரதிநிதியான டத்தோ ஹமிதாவுடன் மக்கள் சக்தி கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஶ்ரீ தனேந்திரன் ஆகியோர் சட்டத்துறைத் தலைவரிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தனர்.
தவறாக நடத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மற்றும் நொண்டித்தனம், குழப்பம் மற்றும் அவரது வழக்கில் பல அநீதிகள் ஏற்பட்டுள்ள எனது முதலாளிக்கு நீதி கிடைக்கவே இந்த மகஜர். இது போன்ற சம்பவம் யாருக்கும் குறிப்பாக சாதாரண மக்களுக்கும் கூட வரக்கூடாது.
சட்டத்துறைத் தலைவர் அலுவலக அதிகாரி ஹஸ்மிசா எங்களுடைய மகஜரை பெற்றுள்ளார். மேலும் அவர் அதை அடுத்த நடவடிக்கைக்காக சட்டத்துறைத் தலைவர் டத்தோ அஹ்மட் டெரிருடின் சாலேவிடம் தெரிவிப்பார் என தனேந்திரன் தெரிவித்தார். டத்தோஸ்ரீ நஜிப்புக்கு நீதி கிடைத்து விரைவில் விடுதலை செய்வார் என நம்புகிறோம். #BEBASBOSSKU