எபிட் லூ என்று அழைக்கப்படும் எபிட் இரவான் இப்ராஹிம் லூ, தனக்கு எதிராக அவதூறாக இருப்பதாக நம்பும் குற்றச்சாட்டுகள் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மிகவும் அடிப்படையற்ற மற்றும் மூர்க்கத்தனமான அவதூறு” தொடர்பாக சுபாங் ஜெயாவில் உள்ள USJ 8 காவல் நிலையத்தில் அறிக்கை தாக்கல் செய்ததாக எபிட் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், விசாரணை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதை காவல்துறையிடம் விட்டுவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். அண்டை நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நேர்காணலைக் கொண்ட சமீபத்திய வைரல் வீடியோவில் எபிட் காவல்துறையில் புகார் அளித்ததாக நம்பப்படுகிறது.அவர் முன்பு உதவியைப் பெற்றவர் என்று பெரித்தா ஹரியான் தெரிவித்தது.
அந்த காணொளொயில் அந்த பெண், இந்த ஆண்டு தொடக்கத்தில் நாட்டிற்கு முதலில் வந்தபோது மலேசியாவில் இருந்து நன்கு அறியப்பட்ட சமயப் போதகர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினார்.









