19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்கி அக்.8 வரை நடைபெற உள்ளது.
அனைத்து போட்டிகளும் ஹாங்சோவில் உள்ள 56 அரங்குகள் மற்றும் மைதானங்களில் நடைபெறுகிறது. சீனா, மலேசியா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 51 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து. படகுபந்தயம் உள்ளிட்ட போட்டிகள் மட்டும் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.