குப்பைத் தொட்டியில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

ஜார்ஜ்டவுன்:

யிர் ஈத்தாமில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் பிளாக் 4E என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், தொப்புள் கொடியுடன் கிடந்த ஒரு பெண் குழந்தையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

துப்புரவு பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை குப்பை வண்டியில் போடுவதற்காக தூக்கிச் சென்றபோது, அந்தக் குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.

பெயர் குறிப்பிட மறுத்த குப்பை லோரி ஓட்டுநர் கூறுகையில், காலை 10 மணியளவில் மூன்றாவது குப்பைத் தொட்டியை தூக்கியபோது குழந்தையின் உடலைக் கண்டெடுத்ததாகக் கூறினார்.

குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஆடையின்றி இருந்ததாகவும், அது குப்பைத் தொட்டியின் அடிப்பகுதியில் இருந்தது என்றும், உடல் ஏற்கனவே வீங்கியிருந்தது என்றும் கூறிய அவர்,  குறித்த சம்பவம் தொடர்பில் போலீசாரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.

இதற்கிடையில், வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் சோஃபியன் சாண்டோங்கைத் தொடர்பு கொண்டபோது, ​​அவர் குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here