சுதந்திரத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றமாக தெரெங்கானு வரலாறு படைத்தது

கோல தெரங்கானுவில் இன்று கூடிய 15ஆவது தெரெங்கானு மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சிகள் இல்லாததால் வரலாறு படைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. தெரெங்கானு சுல்தான், சுல்தான் மிசான் ஜைனால் அபிதீன் இன்று கூடிய 15ஆவது மாநில சட்டமன்றத்தின் முதல் அமர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார், மாநில சட்டசபை சபாநாயகர் முகமட் நோர் ஹம்சா மற்றும் அவரது துணை காசன் சே மாட் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 12 அன்று நடந்த மாநிலத் தேர்தலில், பாஸ் மற்றும் பெர்சத்து கூட்டணி 32 இடங்களையும் கைப்பற்றி வரலாற்றை உருவாக்கியது. இதனால் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக தெரெங்கானுவை எதிர்க்கட்சி இல்லாமல் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here