காஜாங்:
ஜாலான் துன் அப்துல் அஜிஸ் என்ற இடத்திலுள்ள 2.44 மீட்டர் வடிகாலில் சிக்கிய வீடற்ற ஒருவரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள் இன்று அதிகாலை மீட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், பொதுமக்கள் காலை 8.24 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
உடனே காஜாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட 40 வயதுடைய உள்ளூர் நபரை சுமார் 10 நிமிடங்களில் வாய்க்காலில் இருந்து வெளியேற்றினர். மேலும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை ,” அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.