கார் மீது மோதிய லோரி; ஒருவர் உயிரிழப்பு

ஜாலான் கோத்தா திங்கி – மெர்சிங் 13ஆவது கி.மீட்டரில்  கார் மீது லோரி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இரவு 11 மணியளவில் பாதிக்கப்பட்டவர் மெர்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மெர்சிங் துணை OCPD டிஎஸ்பி ஷெரீப் ஷாய் ஷெரீப் மொண்டோய் தெரிவித்தார்.

36 வயதுடைய நபர் ஒருவர் மெர்சிங்கில் இருந்து கோத்தா திங்கி நோக்கி லோரி ஓட்டிச் சென்றபோது, திடீரென தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது  என்று அவர் கூறினார்.

செவ்வாய்க்கிழமை (அக் 3) டிஎஸ்பி ஷெரீப் ஒரு அறிக்கையில், லோரி பின்னர் பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற வாகனம் மற்றும் அதற்குப் பின்னால் இருந்த மற்றொரு வாகனம் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும், லாரி டிரைவர் கையில் காயம் ஏற்பட்டு மெர்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here