சிக்கலில் உள்ள அரசு முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட வழக்கறிஞர் ஒருவருக்கு எதிரான விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டு வருவதை அதன் இயக்குநர் அஸசம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் மற்றும் பணமோசடி மற்றும் சட்டவிரோதச் செயல்களின் வருமானத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டவர்களில் ஒரு வழக்கறிஞரும் ஒருவர் என்று அஸாம் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞரின் பெயரை அஸாம் குறிப்பிடவில்லை.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முஹிடின் யாசினை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனத்தை MACC சோதனை செய்ததாக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
கோலாலம்பூரில் நடந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட எம்ஏசிசி அதிகாரிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார உரையில், அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டிய முஹிடினும் இந்த சோதனையை உறுதி செய்தார்.