ரந்தாவ் பஞ்சாங்:
சமீபத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 42,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள 11 மோட்டார் சைக்கிள்களை மாநில சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து பதிவு எண்கள் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் புக்கிட் புங்கா, தானா மேராவில் உள்ள சட்டவிரோத படகுத்துறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக திணைக்களத்தின் செயல் இயக்குனர் கோ ஜூ காய் தெரிவித்தார்.
இதில் பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கூட கோலோக் ஆறு வழியாக கிளந்தானுக்குள் கடத்தப்படுகின்றன.
அங்கு நடைபெற்று வரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி சுங்கக் துறைக்குழு அப்பகுதிக்கு சென்றதாக அவர் கூறினார்.
“அப்பகுதிக்கு வந்த அவர்கள், பல்வேறு வகையான 11 பாவிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஜெட்டியில் கைவிடப்பட்டதைக் கண்டனர். இவை அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.





















