புதுடெல்லி: வட இந்தியாவில் உள்ள அயோத்தி நகருக்குச் செல்ல வந்த மலேசிய சுற்றுலா பயணி விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இறந்தவர், தர்ம ராஜா ஆர்.பி.சண்முகம், மலேசியாவில் இருந்து ஒரு குழுவாக அயோத்திக்கு வந்ததாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 16ஆம் நூற்றாண்டின் பாபர் மசூதி இருந்த இடத்தில் ஒரு பெரிய இந்து கோவில் கட்டப்பட்டு வரும் வளாகத்திற்கு அருகில் 73 வயதான அந்த முதியவர் தங்கியிருந்தார்.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை. நேற்று ஹோட்டலில் மூன்று அறைகளை முன்பதிவு செய்த நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய ஆறு சுற்றுலாப் பயணிகளில் அவரும் ஒருவர் என்று உள்ளூர் செய்தித்தாள் ஒன்று கூறியது.
இரண்டு நபர்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறியபோது சம்பவம் குறித்து அவர்கள் திரும்பி வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள் ஹோட்டல் மேலாளரின் உதவியை நாடினர். பின்னர் அவர் அறையைத் திறந்தார். தொலைக்காட்சி ஓடி கொண்டிருந்ததாகவும் உயிரிழந்தவர் தரையில் விழுந்து கிடந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.








