கோலாலம்பூர் :
அடுத்த மாதம் முதல் நாடு பருவமழையை எதிர்கொள்ள இருப்பதால், வரவிருக்கும் வெள்ளத்தை நிர்வகிக்க நாட்டின் 9 மாநிலங்களில் நிரந்தர நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என்றும் இவை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது, நாட்டில் ஏற்படும் வெள்ளப் பிரச்சினைக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்னவென்று அராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாகிடான் காசிம் கேட்ட கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக தங்குவதற்கு நிவாரண மையங்கள் தேவை. எனவே இதற்கு தீர்வு காணும் நடவடிக்கையாக 9 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு என நிரந்தர வெள்ள நிவாரண மையங்கள் கட்டப்படும் அத்தோடு அவர்ர்சி நிறுவுவதற்கான இடங்களை அந்தந்ங்