பெட்டாலிங் ஜெயா:
பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலம், கோம்பாக், கோலாலம்பூர், உலு சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் இன்று (அக். 12) நள்ளிரவு 12 மணியளவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மற்றும் சுங்கை சிலாங்கூரில் துர்நாற்றம் ஏற்பட்டது தற்காலிக பணிநிறுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்பட்டது.
இன்று (அக் 12) காலை 6 மணி நிலவரப்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகத்தின் மீட்பு நிலை 33.92% ஐ எட்டியுள்ளது என்றும் ஆயிர் சிலாங்கூர் (Air Selangor) நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.