எதிர்வரும் அக்டோபர், 29 ஆம் தேதி நாட்டில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய சந்திர கிரகணம் மலேசிய நேரப்படி பின்னிரவு 2.02 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.
நள்ளிரவுக்கு மேல் நிகழும் இந்த சந்திர கிரகணத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. ஆலயங்கள் திருக்காப்பு இட்ட பின்னர்தான் சந்திர கிரகணம் நிகழ்வதால் ஆலயங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
எனவே, மக்கள் குழப்பமடைய தேவையில்லை என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துள்ளது.