ஸ்ரீ கெம்பாங்கான்:
ஜாலான் பிங்கிரான் புத்ரா, தாமான் பிங்கிரான் புத்ரா, ஸ்ரீ கெம்பாங்கான் என்ற இடத்தில் இன்று வேனும் காரும் மோதிய விபத்தில் இந்தியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், புரோத்தோன் வீராவில் பயணம் செய்த ஓட்டுநரும் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மோதல் காரணமாக அக்கார் அருகில் உள்ள கால்வாய் பகுதியில் விழுந்தது.இருப்பினும் வேன் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்தில் உயிரிழந்த 20வயது மதிக்கத்தக்க இளைஞர் மற்றும் இளம்பெண் ஆழியோரது சடலங்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் கூறினார்.