மலேசிய GP: 600க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்படுவர்

சிப்பாங்கில் நவம்பர் 10-12 வரை நடைபெறவுள்ள சிப்பாங் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் (SIC) 2023 மலேசிய மோட்டார் சைக்கிள் கிராண்ட் பிரிக்ஸ் (GP) சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக காவல்துறையை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்படுவர். KLIA காவல்துறைத் தலைவர் ACP இம்ரான் அப்த் ரஹ்மான் கூறுகையில், பார்வையாளர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் தங்கள் பணியாளர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாங்கள் எண்ணிக்கையை அதிகரிப்போம். மேலும் Federal Reserve Unit (FRU) பின்னர் சேர்ப்போம்.

100,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே, பார்வையாளர்கள் SIC க்கு செல்வதற்கான திட்டங்களைத் தயாரிப்பதில் ஆக்கப்பூர்வமாக  இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்  என்று அவர் இன்று KLIA  போலீஸ் தலைமையகத்தில் (IPD) மலேசிய GP யின் அமைப்பு பற்றிய விளக்கத்தின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

மூன்று நாள் பந்தயத்தின் போது SIC பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்காது என்பதால், அந்த இடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் (34,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்கள்) நிறுத்துமாறு இம்ரான் அறிவுறுத்தினார். சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். சீரான போக்குவரத்தை உறுதி செய்ய அனைவரின் ஒத்துழைப்பை நாங்கள் கோருகிறோம் என்றார்.

மூன்று நாள் நிகழ்வு முழுவதும் வாகனமோட்டிகளுக்கு எதிராக சிறப்பு அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறைக்கு எந்த திட்டமும் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். நாங்கள் சாலைத் தடைகளை அமைக்க மாட்டோம். ஏனெனில் இது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும். சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவருக்குமான எனது அறிவுரை என்றார். மலேசிய GP நவம்பர் 10 ஆம் தேதி சோதனை அமர்வுடன் தொடங்கும், அதைத் தொடர்ந்து நவம்பர் 11 ஆம் தேதி தகுதி அமர்வு மற்றும் நவம்பர் 12 ஆம் தேதி உண்மையான பந்தய நாளாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here