சரவாக் கபிட்டில் உள்ள சுங்கை மூசா பாலம் பொதுமக்களுக்கு மூடப்பட்டது

கபிட்:

சாங் நகரத்திலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ள ஜாலான் தேகைத் -மூசாவில் உள்ள சுங்கை மூசா பாலம், அப்பகுதியில் மண் அரிப்பினால் ஏற்பட்ட சேதம் காரணமாக பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது.

நேற்றிரவு 9.30 மணியளவில் 166 மீட்டர் நீளமுள்ள குறித்த பாலத்தில் சேதம் இருப்பது கண்டறியப்பட்டது.

“சாலை இப்போது அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது மற்றும் அப்பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன, ”என்றும், தான் நேற்றிரவு அந்த இடத்தைப் பார்வையிட்டதாகவும் கடிபாஸ் சட்டமன்ற உறுப்பினர் லிடம் அசான் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

மேலும் அந்தப் பாலத்தை மாநில பொதுப்பணித்துறை ஆய்வு செய்து, சேதத்திற்கான காரணத்தை கண்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here