18 ஆண்டுகளுக்கு முன்பு கிளாந்தானில் கைப்பற்றப்பட்ட 90 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் நாளை அழிக்கப்படும்

கோத்தா பாரு:

2006 முதல் இந்த ஆண்டு வரையுள்ள மொத்தம் 2,368 வழக்குகளில் இருந்து RM90 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு கிளாந்தான் காவல்துறை அழிக்கும் என்று மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் கூறினார்.

அதேநேரத்தில் “இன்று அழிக்கப்பட்ட போதைமருந்துகள் அனைத்தும் சுமார் 454 கிலோ மற்றும் 2,952 லிட்டர் எடை கொண்டவை என்று அவர் மேலும் கூறினார்.

நாளை அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் சம்மந்தப்பட்ட வழக்குகளுக்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் மேல்முறையீட்டு காலங்கள் முடிவடைந்துவிட்டன என்றும், அவை நாளை நெக்ரி செம்பிலானில் அழிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here