மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பொருளாதார அமைச்சர் உடல் நலம் தேறி வருகிறார்

ஈப்போ:

மீபத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியின் உடல் நிலை தற்போது சீரான நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

“இறைவனின் கிருபையால், அவர் குணமடைந்து வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் தனது பணியை விரைவில் நிறைவேற்றுவார் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

“அவருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்,” என்று, இன்று சுல்தான் அஸ்லான் ஷாவில் நடைபெற்ற சுகாதார அமைச்சின் பயிற்சி நிறுவன (ILKKM) பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் PKR கட்சியின் துணைத் தலைவருமான ரஃபிசுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, யுனிவர்சிட்டி மலாயா மருத்துவ மையத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், அங்கு இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரஃபிசி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here