நஜிப்பிற்கு அரச மன்னிப்புக் கோரி அம்னோ உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்

கோலாலம்பூர்: தேசிய மசூதிக்கு வெளியே 2,000க்கும் மேற்பட்ட அம்னோ உறுப்பினர்கள் கூடி, கட்சியின் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் “Pulangkan Najib” என்ற வாசகம் தாங்கிய வெள்ளை சட்டைகளை அணிந்திருந்தனர் மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தக் குழுவில் கட்சியின் இளைஞர் பிரிவு மற்றும் அவர்களின் மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தனர். “நஜிப் மன்னிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் பல மலேசியர்களில்” அவர்களும் இருப்பதாக அவர் கூறினார்.

வழக்கறிஞரை மாற்றிய பின்னர் நஜிப்பிற்கான நீதி மறுக்கப்பட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்ய கூட்டரசு நீதிமன்றத்தால் அவகாசம் அளிக்கப்படவில்லை. மற்றவர்கள் எவ்வாறு (தங்கள் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க) கால அவகாசம் வழங்கப்பட்டது.   ஆனால் நஜிப் ஏன் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை? என்று பேரணியின் போது கேள்வி எழுப்பினார்.

நஜிப்பின் மன்னிப்பு கோரும் மனுவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையெழுத்துக்கள் கிடைத்துள்ளதாக அக்மல் மேலும் கூறினார். மனுவை சமர்ப்பிக்க இஸ்தானா நெகாராவிடமிருந்து ஒரு தேதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மாமன்னரால் இந்த கோரிக்கை குறித்து  பரிசீலிக்க முடியும் என்று அவர் கூறினார்.

பேரணி தொடங்கி சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்களைத் தடுக்க போலீசார் வந்தனர். ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு நிகழ்வு மீண்டும் தொடங்கியது. இருப்பினும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி கூட்டம் விரைவாக முடிந்தது.

ஜூலை 28, 2020 அன்று, RM42 மில்லியன் SRC நிதியில் அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி மற்றும் குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT) ஆகியவற்றிற்காக நஜிப் அப்போதைய உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி நஸ்லான் கசாலியால் தண்டிக்கப்பட்டார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீடு டிசம்பர் 8, 2021 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

உடனடியாக கூட்டரசு நீதிமன்றம் அவரது இறுதி மேல்முறையீட்டை நிராகரித்ததைத் தொடர்ந்து நஜிப் தனது 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 23, 2022 அன்று தொடங்கினார். மார்ச் 23 அன்று, மேல்முறையீட்டில் அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய அனுமதி கோரிய முன்னாள் பிரதமரின் விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here