விடுமுறைக்கு வர மறுத்ததால் கணவரால் கடத்தப்பட்ட பெண்

கிளந்தானுக்கு தன்னுடன் விடுமுறைக்கு செல்ல மறுத்ததால், ஒரு பெண் அவரது விருப்பத்திற்கு மாறாக அழைத்துச் செல்லப்பட்டார். அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் முகமட் அஸாம் இஸ்மாயில் சனிக்கிழமை (அக் 21) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அக்டோபர் 12ஆம் தேதி அன்று ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 38 வயதான புகார்தாரை அடையாளம்  தெரியாத இருவர் அணுகி, கணவர் உங்களுக்காக படிக்கட்டில் காத்திருப்பதாக கூறினார். அவர் தன் கணவரை சென்றபோது ​புகார்தாரரின் விருப்பத்திற்கு மாறாக கிளந்தானுக்கு அழைத்து சென்றதாக  கூறினார்.

பாசீர் பூத்தேவில் உள்ள ஒரு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த அப்பெண் அக்டோபர் 13 அன்று கணவர் தூங்கிக் கொண்டிருந்தபோது வெற்றிகரமாக அவ்விடத்தை விட்டு தப்பினார். அக்டோபர் 19 அன்று ஒரு போலீஸ் குழு தாமான் அம்பாங்கில் இருவரைக் கைது செய்தது. முதல் நபர் 39 வயதுடையவர் மற்றும் தஹ்ஃபிஸ் மேலாளராக பணிபுரிகிறார் மற்றும் புகார்தாரரின் கணவர் ஆவார். இரண்டாவது தஹ்ஃபிஸ் பள்ளி உதவியாளராக பணிபுரியும் 30 வயதுடையவர்.

புகார்தாரர் விடுமுறையில் கிளந்தானுக்கு அவரைப் பின்தொடர மறுத்ததாலும் அவர்களது திருமணத்தின் நிலையைப் பதிவு செய்ய மறுத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அவர் சந்தேக நபரின் மூன்றாவது மனைவியும் ஆவார். இருவரும் அக்டோபர் 24 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 365இன் கீழ் கடத்தல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here