GM KLANG உடன் இணைந்து தீபாவளியை வண்ணமயமாய்க் கொண்டாடுங்கள்

தீபாவளித் திருநாளைக் கொண்டாடி மகிழ இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள வேளையில், தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பொருள்களை வாங்கிட, வார இறுதி விடுமுறைகளில் GM KLANG மொத்த விலை வியாபார மையத்திற்குப் படையெடுக்கும் இந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிட ஏதுவான ஒரு மையமாக விளங்கிடும் GM KLANG, எந்த வகையிலும் தேசிய ஒருமைப்பாட்டையும் நல்லிணக்கத்தையும் செயற்படுத்தத்தக்கதாகவே செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான அனைத்துப் பொருள்களையும் வாங்கி மகிழக்கூடிய ஓரிடச் சேவையகமாக இந்த மையம் இந்தியர்களுக்கு விளங்குகிறது.

ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் வாங்கக்கூடிய மையமாக GM KLANG அமைந்திருப்பதால் தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கிடும் மையமாக இந்த பேரங்காடியையே பெரும்பாலானோர் தேர்வு செய்கின்றனர் என்கிறார் GM KLANG மொத்த வணிக மையத்தின் விளம்பரத் தொடர்புத்துறை மூத்த நிர்வாகி, நோர்சுஹைடா ஒஸ்மான்.

இந்த விழாக்காலத்தில் திரைச்சீலைகள், மேசை விரிப்புகள், குஷன் உறைகள், கம்பளங்கள், அலங்காரச் செடிகள் உள்ளிட்ட பல்வேறான அலங்காரப் பொருள்களை மக்கள் இங்கு விரும்பி வாங்குகின்றனர். அவை மட்டுமின்றி பொட்டலங்களில் அடைக்கப்பட்ட முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்கள், கைக் கடிகாரம், மோதிரம், சங்கிலி போன்ற பல அலங்காரப் பொருள்களையும் தீபாவளிக்கு அணிந்து மகிழ அவர்கள் வாங்குகின்றனர்.

அதிகப் பொருள்களை வாங்கினால் அதிகப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டுக்கு ஏற்ப அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கிட தங்களுக்கு விருப்பமான வியாபார மையமாக மக்கள் GM KLANG வணிக மையத்தைக் கருதுகின்றனர்.

இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் டாஸ்லின் தீபாவளி 2023 என்ற இயக்கத்தை வரும் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரையில் GM KLANG ஏற்பாடு செய்திருக்கிறது.

GM KLANG வளாகத்தில் குதூகலத் தோற்றத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்துப் பெருமக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தாலும், இந்த வணிக வளாகத்திற்கு வரும் அனைத்து இன மக்களுக்குமே அந்தக் குதூகல உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்த அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மருதாணி வரையும் சேவை, ரங்கோலி கோலப் போட்டி, ஷாப் – ரிசிவ் இயக்கம் போன்றவை இந்த குதூகலங்களுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. 200 ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட விலையில் இங்கு பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2 ரசீதுகளை ஒருங்கிணைத்து அதிர்ஷ்டக் குலுக்கு நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here