காஸாவில் நடைபெறும் போரைத் தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீதான தனது விமர்சனத்தை “குறைக்க” விரும்பிய மேற்கத்திய சக்திகளால் தாம் அச்சுறுத்தப்பட்டதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக Axiata Arena நடைபெற்ற பேரணியில், நான் பயப்பட மாட்டேன். பாலஸ்தீன மக்களுக்குப் பின்னால் உறுதியாக இருப்பேன் என்று கூறினார்.
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் துணை நிதி அமைச்சர்கள் அஹ்மத் மஸ்லான் மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அட்டூழியங்கள் நடைபெற்று வந்தாலும் டெல் அவிவை ஆதரித்த மேற்கத்திய அரசாங்கங்களை அன்வார் கண்டித்தார். அவற்றை “காட்டுமிராண்டித்தனத்தின் இதயம்” என்று விவரித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் புத்ராஜெயா ஹமாஸைக் கண்டிக்குமா என்று வினவியபோது, மோதலை நோக்கிய அதன் பாசாங்குத்தனமான நிலைப்பாட்டை மேற்கத்திய நாடுகளுக்கு அன்வார் எடுத்துக் கூறினார். அக்டோபர் 7 அன்று இஸ்ரேலின் பல இடங்களில் ஹமாஸ் குழுவின் திடீர் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது.
காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசித் தாக்கியதைத் தொடர்ந்து, இறப்பு எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியுள்ளது, அவர்களில் பாதி குழந்தைகள். 15,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.