அலோர் ஸ்டார், ஜாலான் கோல கெடாவில் ஞாயிற்றுக்கிழமை (அக் 22) நடந்த விபத்தில் 14 வயது சிறுமி தொடர்புடைய விசாரணையில், அவரும் கற்பழிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சாத்தியத்தை போலீசார் வெளிப்படுத்தினர். சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 41(1)ன் கீழ் விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த சிறுமியின் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1)ன் கீழ் மற்றொரு விசாரணைக் கோப்பு திறக்கப்பட்டுள்ளதாக கெடா காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபிசோல் சலே தெரிவித்தார். அவர் இரண்டு ஆடவர்களால் கற்பழிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் இரண்டு ஆண்களுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை அந்த சிறுமி ஒப்புக்கொண்டார். மேலும் அவர் மைனர் என்பதால் போலீசார் இந்த வழக்குகளை கற்பழிப்பு என வகைப்படுத்தியுள்ளனர். ஒருவர் நேற்று (அக் 25) கைது செய்யப்பட்டார், மற்றவர் தேடப்படுகிறார் என்று அவர் வியாழக்கிழமை (அக். 26) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இரவு 7.05 மணியளவில் நடந்த சம்பவத்தில், இளம்பெண் ஓட்டிச் சென்ற கார் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், நூர் ஷபிகா அப்துல்லா 32, என்ற பெண் உயிரிழந்தார். அவரது சகோதரி நூரலிசா 43, காயமடைந்தார். இளம்பெண்ணின் சிறுநீர் பரிசோதனை எதிர்மறையாக வந்தது என்றும், அவர் இப்போது சமூக நலத்துறையின் பராமரிப்பில் இருப்பதாகவும் பிசோல் கூறினார்.
விபத்து தொடர்பான விசாரணைக்காக அவரது தாயாரையும் போலீசார் அழைத்துள்ளதாகவும் மேலும் நடவடிக்கைக்காக அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பதற்கு முன்பு விசாரணை ஆவணங்களை இறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு கெடாவில் சிறார்களை உள்ளடக்கிய 140 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு அறிக்கைகள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக ஃபிசோல் கூறினார். விசாரணையில், பல வழக்குகள் சம்மதத்துடன் உடலுறவு கொண்டது, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறார்களாக இருப்பதால், வழக்குகள் (சட்டரீதியான) கற்பழிப்பு என வகைப்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.