கோத்தா கினாபாலு:
இன்று மாலை (மே 1) சண்டாக்கானில் உள்ள கம்போங் செபாலா கிரிமான் துன் மாவில் 22 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
குறித்த சம்பவம் தொடர்பில் மாலை 4:07 மணிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், உடனே 14 பேர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்று,
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாலை 4.41 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்,” என்று, நடவடிக்கைத் தளபதி ரோஸ்மிடியன் மஜிட் அந்த அறிக்கையில் கூறினார்.




















