ஜார்ஜ் டவுன்:
பினாங்கு பாலத்தில் விரிசல் ஏற்படுவதாக வெளியான செய்தியை பினாங்கு அரசு மறுத்துள்ளது.
இரண்டு பினாங்கு பாலங்களின் அதிகாரிகளுடனான சோதனைகள் செய்வது போன்ற வைரலான வீடியோ பதிவில் எந்த உண்மையும் இல்லை. வைரலான வீடியோ பழையது என்றும் இந்த சம்பவம் 2014 இல் மலேசியாவிற்கு வெளியே நடந்தது” என்று மாநில உள்கட்டமைப்புக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்தார்.
மேலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் மக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.





















